Valpari & topsilip 2014

வால்பாறை டாப்சிலிப்
17.10.2014

இரவு பழனி இரயிலுக்கு அதிசயமாக அனைவருமே முன்னதாகவே வந்துவிட்டார்கள். இரவு எங்கள் பயணம் தொடங்கியது, 18.10.2014 அன்று காலை பழனி இரயில் நிலையத்தை வந்தடைந்தோம். பழனி கோயில் எங்கள் பயண திட்டத்தில் இல்லை என்பதால் வண்டியில் இருந்தபடியே கோயிலை தரிசித்தார்கள்.

18.10.2014

குரங்கு அருவி

இயற்கையின் வெள்ளோட்டத்தில் அனைவரும் நனைந்துமகிழ்ந்தனர். சிலர் குளிக்க மனம் இன்றி இருந்தனர். அவனைவரின் உற்சாகம் அவர்களையும் தொற்றிக்கொள்ள அவர்களும் குளிக்கத் தொடங்கினார்கள். இதனால் கால விரயம் தான் ஏற்பட்டது. அனைவரின் குளியலை முடித்துக்கொண்டு வால்பாறை நகரத்தைச் சென்றடைந்தோம் மதியம் உணவிற்கான நேரம் கடந்த நிலையிலும் அங்கு ஒரு உணவகத்தில் எங்கள் மதிய உணவை முடித்துக்கொண்டோம்.



எங்களுக்காக முன்பதிவு செய்யப்பட்ட அறை அருகில் இருந்தது. ஆனால் அந்த அறைகள் போதிய வசதிகள் இல்லை , தூய்மையாகவும் இல்லை என்பதால் வேறு அருகில் உள்ள விடுதிக்கு சிலர்  


அவர்களின் விருப்பத்தின் பேரில் இடம் மாற்றப்பட்டார்கள். 

சோலையார் அணைக்கட்டு

மாலை அனைவரும் சோலையர் அணைக்கட்டை பார்வையிடசென்றோம். பார்ப்பதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை என்றாலும் இயற்கை அழகு கண்ணைப் பறித்தது. கொஞ்சம் நேரம் அங்கு செலவிட்டோம் 

புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். நேரம் அதிகமானாதல் அறைக்கு திரும்பினோம். நல்ல தேயிலை விற்றார்கள் வாங்கிக்கொண்டோம். அருமையான குளிர் தாக்கியது. இரவு கஷ்டப்பட்டு உறங்க வேண்டியதாக இருந்தது.

19.10.2014

காலை 6 மணிக்கெல்லாம் எழுந்து தயாராக இருக்க வேண்டும் என்று பயண ஏற்பாட்டாளரும் மற்றோரும் சொல்லிவிட்டக் காரணத்தினால் நான், பாலாஜியும்  எழுந்து 6 மணிக்கெல்லாம் தயாரனோம். 

ஆனால் சொன்னவர்களை யாரும் 7 மணி வரை காணவில்லை என்பது தன் வருத்தப்படக்கூடிய விஷயம்.

பாலாஜிகோயில் & தேயிலை தோட்டம்

காலை அறையை காலிசெய்துவிட்டு போகும் வழியில் தேயிலை தோட்டத்தில் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். இந்த நேரத்தில் பலரையும் அட்டைபூச்சி பதம் பார்த்தது. 




பாலாஜி கோயிலுக்கு சென்றோம் அது ஒரு தனியாருக்கு சொந்தமான கோயில் என்பதால் அருமையாக பராமரித்துள்ளார்கள்.

ஆழியார் அணைக்கட்டு

அங்கிருந்து நேராக ஆழியார் அணைக்கட்டு நோக்கி பயணமானோம். இடையில் ஒரு இடத்தில் எங்கள் காலை உணவை முடித்துக்கொண்டோம். ஆழியார் அணைக்கட்டு மழையின் காரணமாக நிரபியிருந்தது 

காண அருமையாக இருந்தது. இதை முடித்துக்கொண்டு மதியம் டாப்சிலிப் போகிற வழியில் எங்கள் மதிய உணவை முடித்துக்கொண்டோம். 


டாப்சிலிப்

டாப்சிலிப் மதியம் 2 மணிக்கெல்லாம் சென்றடைந்தோம். அங்கிருந்து வனத்துறையின் வாகனத்தில் காட்டுக்குள் பயணமானோம் இயற்கை அழகு அருமையாக இருந்தது. போகிற வழியில் சில யானைகளையும், கழுகு, மற்றும் குரங்குகளையும் கண்டோம். அங்கிருந்த குட்டியானை அனைவரையும் கவர்ந்தது. இதை முடித்து கேரளா, தமிழ்நாடு எல்லைப்பகுதியை பார்வையிட்டோம்.


மாலை ஆகிவிட்டதால் அங்கிருந்து கோயம்பத்தூர் நோக்கி பயணமனோம். வழியில் தேநீருக்காக வண்டி நின்றது அருகில் மசாணியம்மன் கோயில் உள்ளதால் அதை பார்க்க வேண்டும் என்று சிலர் ஆசைப்பட்டார்கள் அங்கு சென்றோம். ஆசைப்பட்டவர்கள் கடவுளை தரிசித்து விரைவில் வந்திருந்தால் இரவு உணவை சரியான படி திட்டமிட்டு சாப்பிட்டிருக்கலாம். கோவை வந்து சேர்ந்ததும் மழை வேறு  அதிகமாக இருந்தது. கடைசியில் ரயில் நிலையத்தில் உள்ள கேன்டீனில் சாப்பிடவேண்டியதாய் போயிற்று. இரண்டு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு இரயில் ஏறினோம்.

விமர்சனம்

நாகராஜ் மற்றும் குடும்பம்

பயண ஏற்பாட்டளார்களில் ஒருவர் என்பதால் இந்தமுறை அதிகமாக இவரது குரல் ஒலிக்கவில்லை. ஆனால் அதற்கு பதில் இவரின் மகளின் குரல் அதிகமாக ஒலித்தது. இவரது மனைவி எப்போதும் போல அமைதியாக காணப்பட்டார்.

சுசி மற்றும் குடும்பம்

சுற்றுலாவை அதிகம் விரும்பி அனுபவித்தவர்கள் என்று வேண்டுமானால் இவர்களை சொல்லலாம். சுசி அதிக நொறுக்குதீனிகளை தின்பதிலும், புகைப்படங்கள் எடுப்பதிலும் ஆர்வம் காட்டினார். கீர்த்தியின் மழலை அனைவரையும் கவர்ந்தது. கிருபா மிகவும் அமைதியாக இருந்தாள் யாரிடமும் கூப்பிட்டதும் சென்று விட்டாள்.

மகேஷ் மற்றும் குடும்பம்

மகேஷ் வருகிறார் என்றால் நெறுக்குதீனிக்கு பஞ்சமில்லை என்பதை இந்தமுறையும் நிருபித்தார். ஆனால் கடைசி வரை பின்பக்கம் வரவேயில்லை. அக்க்ஷிதா இந்த முறை பாடாதது கொஞ்சம் குறையாகவே இருந்தது. இவரது மனைவி சுற்றுலாவுக்கு வருகிறார் என்றார் கலகலப்புக்கு பஞ்சம் இல்லை. அது இந்தமுறையும் இருந்தது.

கெமி மற்றும் குடும்பம்

எப்பவும் போலவே இவரும் இவரது கணவரும் காதல் பறவைகளாக திரிந்தார்கள். சுற்றுலாவில் அதிகம் அவர்வம் காட்டவில்லை, கென்னத்தின் குறும்புத்தனம் அதிகமாக இருந்தது. மசைஸ் அப்பாவைவிட்டு இறங்கவே இல்லை. எதைப் பற்றியும் அதிகம் அலாட்டிக்கொள்ளத குடும்பம்.

பாலாஜி மற்றும் குடும்பம்

இவரது எளிமையும், இயல்பாக பழகும் குணமும் இந்த சுற்றுலாவில் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று, இவரின் மகளின் குறும்புத்தனமான பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது. இவரது மனைவி ஒளிநிலாவும்  மிகவும் அமைதியாகவே காணப்பட்டார்.

கணியன் மற்றும் அம்மா

கணியன், அம்மா பிள்ளை என்பதை இந்த சுற்றுலாவிலும் நிருபித்தார். இந்த முறை சரியாக சாப்பிடகூட முடியவில்லை என்று நினைக்கிறேன். இருந்தாலும் இருவரின் பாசப்பிணைப்பை பராட்டிதான் ஆகவேண்டும்.

பாலாஜி மற்றும் சங்கர்

இவர்கள் இருவரின் செயல்களில் தான் சுற்றுலா கொஞ்சம் சுறுசுறுப்பாக போனது. எப்பவும் போல் சங்கரின் கஞ்சத்தனம் இச்சுற்றுலாவிலும் பிரதிபலித்தது. பாலாஜியின் பிறந்தநாள் என்றாலும் அவர் அதைப் பற்றி பெரிதாக ஒன்றும் அலாட்டி கொண்டதாக தெரியவில்லை. டிரிட் கேட்டு ஏமாந்தது தான் மிச்சம்.

குடும்பத்துடன் வரவில்லை என்பதால் என்னால் எப்போதும் போல் இருக்க முடியவில்லை. ஆனால் அந்த இயற்கை அழகை அதிகம் ரசித்தேன். மழலைகளையும்.

அமைப்பாளர்களுக்கான பாராட்டும், குட்டும்

  • பார்த்த இடங்கள் அனைத்தும் நிறைவாக இருந்தன. இரண்டு நாட்கள் எப்படி போனது என்பதே தெரியவில்லை. 
  • ஆனால் உணவுக்கான நேரத்தை சரிவர தீர்மானிக்க முடியவில்லை. 
  • பார்த்த சில இடங்களுக்கான நேரத்தை சரியாக ஒதுக்க வில்லை. 
  • சுற்றுலாவிற்கான செலவுகளை மட்டுமே ஏற்றுக்கொள்வோம் என்பதை ஏற்கனவே கூறியிருந்தும் சில இடங்களில் தேவையற்ற செலவுகளை மன்றத்தின் வாயிலாக செய்தது.
  • காலையிலேயே ஒரு கோயிலுக்கு சென்றும் அதிகபடியாக வேறுஒரு கோயிலைத் தேர்வு செய்தது, மேலும் அதற்காக அதிக நேரம் செலவிட்டது. 
  • சுற்றுலா என்பது அதற்கான ஏற்பாடுகளை செய்யும் அமைப்பாளர்களின் கட்டுப்பாட்டில் தான் நடந்தேறவேண்டும். அப்போது தான் அந்த சுற்றுலாவை முறையாக மற்றவர் மனம் கோணாமல் செயல்படுத்த 


முடியும், தேவை இன்றி தனிப்பட்டவரின் முடிவுகளுக்கு எக்காரணத்தைக்கொண்டும் முக்கியத்துவம் கொடுக்கப்பட கூடாது. தனிப்பட்டவரின் முடிவை அனைவரும் ஒத்துக்கொள்ளும் பட்சத்தில் அதை பரிசீலிக்கலாம்.  இது இந்நாள் வரை நான் ஏற்பாடு செய்த சுற்றுலாக்களின் வாயிலாக நான் கடைப்பிடித்தது.













Comments

  1. Replies
    1. அமைப்பாளர்களுக்கு பாராட்டும் குட்டும் என்ற தலைப்பில் பாராட்டுகள் என்பது ஒன்றும் தென்படவில்லை.

      அனைத்தும் சரி ஆனால் திரு. கிரிஷ் கோபத்தை அடங்கியதாக கூறுவது ஏற்கமுடியாத ஒன்றும். அவர் எப்பொழுதும் போல் இம்முறை கோபத்தை வெளிப்படுத்தியது அனைவரையும் சற்று அதிருப்திக்கு ஆளாக்கியது என்பது கிடைத்த தகவல்கள்.
      எப்பொதும் போல் ரோபோவாக வலம் வந்தார் என்பதே உண்மை. நானாறிந்த அளவில் அலுவலகத்தில் நடந்ததுக் கொள்வது இம்முறை திரு. கிரிஷ் நடந்துக் கொண்டார் என்பதே உண்மை.

      நேரம் இருந்த காரணத்தினால் திரு. மகேஷ் அவர்கள் அனைவரின் ஒப்புதலுடன் கோயில் செல்ல ஏற்பாடு செய்தார் என்பதே உண்மை. அது போக வண்டியை எந்த நேரத்திற்கு விட வேண்டும் என்பது அமைப்பாளர்களுக்கு தெரியாது. அமைப்பாளர்கள் புரிந்துக் கொண்ட வகையில் ரயில் புறப்படும் நேரத்தை கொண்டே வண்டி விடுவிக்கப்படுவதாக இருந்தது. இதில் அமைப்பாளர்கள் தவறில்லை.

      Delete
    2. என் கோபத்தால் யாராவது அதிருப்தி அடைந்திருந்தால் நான் அதை மகிழ்ச்சியாக வரவேற்கிறேன். ஏன் என்றால் என் கோபம் என்னை பொறுத்த வரையில் நியாயமானது. அதற்காக நான் வருத்தப்பட போவதில்லை. (யாருக்காகவும் எனக்கு சரி என்று படும் என் சொந்தக் கருததுக்களை மாற்றிக்கொள்ள மாட்டேன்.)

      மேலும் மகேஷ் அனைவரின் ஒப்புதலுடன் கோயில் செல்ல ஏற்பாடு செய்தார் என்பது தவறான தகவல், என்னிடமோ, கெமியிடமோ கேட்கவில்லை, மேலும் சுற்றுலா ஏற்பாடு என்பது நாகராஜ் மற்றும் பாலாஜி ஆகியோரல் ஏற்பாடு செய்யப்பட்டது அப்படி போவது என்றால் இவர்கள் இருவரும் தான் அனைவரின் ஒப்புதலுடன் ஏற்பாடு செய்திருக்க வேண்டும் அதைவிடுத்து முடிவுகளை எடுப்பதை மற்றொருவரிடம் விடுவது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது அன்று. அப்படி ஒவ்வொருவரும் ஒரு இடத்துக்கு போகச் சொன்னால் அதை பயண ஏற்பாட்டாளர்கள் அனுமதிப்பார்களா?

      Delete

Post a Comment

Popular Posts